தீபாவளி பண்டிகையை ஒட்டி தாராபுரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு

தாராபுரத்தில் தீபாவளி கூட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் போலிசார் இறங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பாதுகாப்பு நீடிக்கும் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


திருப்பூர்: தீபாவளி பண்டிகையை ஒட்டி தாராபுரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள் தங்க நகைகள் பட்டாசுகள் இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் வாங்க தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பெரிய கடை வீதி ஜவுளி கடை வீதி பொள்ளாச்சி ரோடு சின்ன கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த கூட்டத்தை தவிர்க்கவும் சீரான போக்குவரத்தை ஏற்படுத்த நகரின் மையப் பகுதியான பூக்கடைக்காரனில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பர் கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள் பலகைகளால் சாரம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இப்பகுதியில் 24 மணி நேரமும் 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் போக்குவரத்தை பொதுமக்கள் நடமாட்டத்தையும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கோர்வையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்கள் பணம் மற்றும் நகைகள் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...