தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்டிஓ விடம் மனு

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் ஆர்டிஓ விடம் விசிகவினர் மனு அளித்தனர்.


திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில், நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில் கூறியிருப்பதாவது தாராபுரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றது. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் எனவே இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருள்கள் விற்பனையை தடுக்கவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு கேமரா அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும், போலீசார் ரோந்து பணியினை அதிகப்படுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாநில செயலாளர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க முத்தமிழ் வேந்தன், மாவட்ட துணை செயலாளர் ஆற்றல் அரசு, நகர துணை செயலாளர்கள் உதயகுமார், முருகவேல் உள்ளிட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...