தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்டிஓ விடம் மனு

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் ஆர்டிஓ விடம் விசிகவினர் மனு அளித்தனர்.


திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில், நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில் கூறியிருப்பதாவது தாராபுரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றது. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் எனவே இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருள்கள் விற்பனையை தடுக்கவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு கேமரா அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும், போலீசார் ரோந்து பணியினை அதிகப்படுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாநில செயலாளர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க முத்தமிழ் வேந்தன், மாவட்ட துணை செயலாளர் ஆற்றல் அரசு, நகர துணை செயலாளர்கள் உதயகுமார், முருகவேல் உள்ளிட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...