சிலை திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

அன்னூர் அருகே 200 ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சிறுமுகை அடுத்த ஆணைப்பள்ளி புதூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவர்களுக்கு குழதெய்வமாக இருக்கக் கூடிய இந்த கோவிலின் மூலவரான கருப்பராயன் சிலையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் கடத்திச் சென்றனர்.

இது குறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறுமுகை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் காவல்துறையின போதிய அக்கறையின்றி அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆணைப்பள்ளி புதூர் கிராம மக்கள் இன்று கோவில் அருகே திரண்டு சாமி சிலையை கடத்தியவர்களை கைது செய்ய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத சிறுமுகை காவல்துறையினரை கண்டித்தும் அன்னூர் சிறுமுகை நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அரசு பேருந்தினை சிறைபிடித்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும், சிலை கடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அன்னூர்- சிறுமுகை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...