தாராபுரத்தில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் - நடிகர் ரஞ்சித்துக்கு வாழ்த்து

மோரியா மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களை கண்டித்து வருகின்ற ஜனவரி மாதம் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களை இணைத்து மாநாடு நடைபெற உள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார், கோட்ட செயலாளர்கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் சதீஷ், மாவட்டதுணை தலைவர்கள் தவமணி பாலு, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது, ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் வருகின்ற 9-ந் தேதி நடத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.

சென்னிமலை அருகே உள்ள கந்தகுடி என்ற கிராமத்தில் உள்ள மலையை மோரியா மலை என பெயர் மாற்றம் செய்து வைத்துள்ளனர். அவ்வாறு மலையின் பெயரை மாற்றக்கூடாது என அந்த கிராம மக்கள் தற்போது போராடி வருகின்றனர்.

மோரியா மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களை கண்டித்து வருகின்ற ஜனவரி மாதம் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்கள் சேர்ந்து மாநாடு நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக்களில் ஆண்கள், பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுகின்றனர்.

இதற்கு திரைப்பட நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்திருந்தார். அதில் வள்ளி கும்மியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை வளத்தெடுக்கலாம் என தெரிவித்திருந்தார். கருத்து கூறிய திரைப்பட நடிகர் ரஞ்சித்துக்கு இந்து முன்னணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...