தாராபுரத்தில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் - நடிகர் ரஞ்சித்துக்கு வாழ்த்து

மோரியா மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களை கண்டித்து வருகின்ற ஜனவரி மாதம் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களை இணைத்து மாநாடு நடைபெற உள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார், கோட்ட செயலாளர்கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் சதீஷ், மாவட்டதுணை தலைவர்கள் தவமணி பாலு, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது, ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் வருகின்ற 9-ந் தேதி நடத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.

சென்னிமலை அருகே உள்ள கந்தகுடி என்ற கிராமத்தில் உள்ள மலையை மோரியா மலை என பெயர் மாற்றம் செய்து வைத்துள்ளனர். அவ்வாறு மலையின் பெயரை மாற்றக்கூடாது என அந்த கிராம மக்கள் தற்போது போராடி வருகின்றனர்.

மோரியா மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களை கண்டித்து வருகின்ற ஜனவரி மாதம் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்கள் சேர்ந்து மாநாடு நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக்களில் ஆண்கள், பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுகின்றனர்.

இதற்கு திரைப்பட நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்திருந்தார். அதில் வள்ளி கும்மியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை வளத்தெடுக்கலாம் என தெரிவித்திருந்தார். கருத்து கூறிய திரைப்பட நடிகர் ரஞ்சித்துக்கு இந்து முன்னணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...