காடுகுட்டை பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் - அமைச்சர் முத்துசாமி துவக்கி வைப்பு

கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் மூலம் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மோட்டார் இயக்கப்பட்டால் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும் எனவும், காடுகுட்டை பகுதியில் 7.36 கோடி லிட்டர் நீரை தேக்க முடியும் எனவும், இதனால் 15 நாட்களில் குட்டை நிரம்பக் கூடும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் காடுகுட்டை பகுதிக்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அனுப்பும் வகையில் 5.16 கொடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மற்றும் நீரூந்து நிலையத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கடந்த 4ம் தேதி திறந்து வைத்தார்.



கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு ஒண்டிப்புதூர் சேகரிப்பு நிலையம் அருகே நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து நீர்ந்து நிலையம் கட்டப்பட்டு 125 HC திறனுள்ள மோட்டர் பொருத்தப்பட்ட நிலையில், செட்டிபாளையம் பகுதியில் உள்ள காடு குட்டை என்ற பகுதி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மின் இணைப்புகளில் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் சுத்திகரித்த நீரை பம் செய்து குட்டைகளில் நிரப்புவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு பலமுறை விவசாயிகள் கொண்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மூலம் 40 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு மின் இணைப்பு பெறப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இதனை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் காடு குட்டைக்கு வந்தடைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மோட்டார் இயக்கப்பட்டால் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும் எனவும், பாடுகூட்டை பகுதியில் 7.36 கோடி லிட்டர் நீரை தேக்க முடியும் எனவும், இதனால் 15 நாட்களில் குட்டை நிரம்பக் கூடும் என தகவல் தெரிவித்த நீர்வளத்துறை அதிகாரிகள், இங்கிருந்து செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள 14 குட்டைகள் பீடம் பள்ளி கிராமத்தில் உள்ள ஒன்பது குட்டைகள் பட்டணம் பகுதியில் உள்ள 4 குட்டைகள் இனமொத்தம் 27 குட்டைகள் நிரம்ப கூடும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் சுமார் 5000 ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறும் எனவும் நீர்மட்டம் உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...