அவினாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் சங்கிலி பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

அவினாசியில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் பத்தரை சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலிகளை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றதில் பெண், அவரது மகன் கீழே விழுந்து காயமடைந்தனர்.


திருப்பூர்: அவினாசியில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, மடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவிநாசி - திருப்பூர் சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மனைவி யுவராணி, மகன் கனிஷ்க் ஆகியோருடன் உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டு, திரும்ப திருப்பூர்- அவிநாசி சாலையில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் அவர்களை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் யுவராணி கழுத்தில் அணிந்திருந்த ஏழரை மற்றும் மூன்று சவரன் தங்கச் செயின்களை கழுத்திலிருந்து அறுத்து கொண்டு சென்றனர்.

இதனால் நிலைதடுமாறிய யுவராணி மற்றும் அவரது மகன் கனிஷ்க் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சுதாரித்த கந்தசாமி மர்மநபர்களை சிறிது தூரம் துரத்திக் கொண்டு சென்றார். ஆனால் அவர்கள் தப்பி விட்டனர். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் மகனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். தொடர்ந்து அவிநாசி காவல் நிலையத்தில் கந்தசாமி நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த அவிநாசி போலீசார் அங்கு பதிவு ஆகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...