அவினாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் சங்கிலி பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

அவினாசியில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் பத்தரை சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலிகளை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றதில் பெண், அவரது மகன் கீழே விழுந்து காயமடைந்தனர்.


திருப்பூர்: அவினாசியில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, மடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவிநாசி - திருப்பூர் சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மனைவி யுவராணி, மகன் கனிஷ்க் ஆகியோருடன் உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டு, திரும்ப திருப்பூர்- அவிநாசி சாலையில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் அவர்களை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் யுவராணி கழுத்தில் அணிந்திருந்த ஏழரை மற்றும் மூன்று சவரன் தங்கச் செயின்களை கழுத்திலிருந்து அறுத்து கொண்டு சென்றனர்.

இதனால் நிலைதடுமாறிய யுவராணி மற்றும் அவரது மகன் கனிஷ்க் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சுதாரித்த கந்தசாமி மர்மநபர்களை சிறிது தூரம் துரத்திக் கொண்டு சென்றார். ஆனால் அவர்கள் தப்பி விட்டனர். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் மகனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். தொடர்ந்து அவிநாசி காவல் நிலையத்தில் கந்தசாமி நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த அவிநாசி போலீசார் அங்கு பதிவு ஆகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...