அவினாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் சங்கிலி பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

அவினாசியில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் பத்தரை சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலிகளை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றதில் பெண், அவரது மகன் கீழே விழுந்து காயமடைந்தனர்.


திருப்பூர்: அவினாசியில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, மடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவிநாசி - திருப்பூர் சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மனைவி யுவராணி, மகன் கனிஷ்க் ஆகியோருடன் உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டு, திரும்ப திருப்பூர்- அவிநாசி சாலையில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் அவர்களை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் யுவராணி கழுத்தில் அணிந்திருந்த ஏழரை மற்றும் மூன்று சவரன் தங்கச் செயின்களை கழுத்திலிருந்து அறுத்து கொண்டு சென்றனர்.

இதனால் நிலைதடுமாறிய யுவராணி மற்றும் அவரது மகன் கனிஷ்க் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சுதாரித்த கந்தசாமி மர்மநபர்களை சிறிது தூரம் துரத்திக் கொண்டு சென்றார். ஆனால் அவர்கள் தப்பி விட்டனர். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் மகனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். தொடர்ந்து அவிநாசி காவல் நிலையத்தில் கந்தசாமி நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த அவிநாசி போலீசார் அங்கு பதிவு ஆகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...