திருப்பூரில் அரச பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி - மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர், அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த உயிர்காக்கும் நீச்சல் இலவச பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார்.

திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதம் தோறும் 20 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு காலை மாலை என இரண்டு வேலைகளிலும் இலவசமாக நீச்சல் பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.



வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சிகள் நடக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் நீச்சல் பயிற்சிக்காக ஆகும் செலவு அனைத்தையும் ரோட்டரி சங்கமே ஏற்றுக்கொள்வதோடு ஆண்டு முடிவில் நீச்சல் பயிற்சியில் தகுதி பெரும் மாணவர்களை மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க செய்ய உள்ளனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சியை துவக்கி வைத்து நீச்சல் குளத்தில் மாணவர்களுடன் நீச்சல் அடித்து ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தினார்.

மேலும் நீச்சல் பயிற்சிகளை முடிக்கும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் நீரில் மூழ்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தாங்கள் நீச்சல் பழகியதோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்ற மாணவர்களையும் நீச்சலில் பழக ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...