பல்லடத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் சதாசிவம் என்பவர் தனது காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, மீண்டும் எடுக்க முயன்றபோது திடீரென கார் பற்றி எரியத்தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சதாசிவம் என்பவர் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மற்றொரு கார் சதாசிவத்தின் காரை முந்தி செல்ல முயன்றபோது, சுதாரித்துக் கொண்ட சதாசிவம் சாலையோரமாக காரை நிறுத்தி உள்ளார்.



மீண்டும் காரை இயக்க முயன்ற போது திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது. காரின் முன் பக்கத்தில் தீ எரிவதை சுதாரித்துக் கொண்ட சதாசிவம் காரை விட்டு வெளியேறினார்.

சாலையோரமாக திடீரென கார் பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பரபரப்பான திருப்பூர் சாலையில் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...