பல்லடத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் சதாசிவம் என்பவர் தனது காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, மீண்டும் எடுக்க முயன்றபோது திடீரென கார் பற்றி எரியத்தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சதாசிவம் என்பவர் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மற்றொரு கார் சதாசிவத்தின் காரை முந்தி செல்ல முயன்றபோது, சுதாரித்துக் கொண்ட சதாசிவம் சாலையோரமாக காரை நிறுத்தி உள்ளார்.



மீண்டும் காரை இயக்க முயன்ற போது திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது. காரின் முன் பக்கத்தில் தீ எரிவதை சுதாரித்துக் கொண்ட சதாசிவம் காரை விட்டு வெளியேறினார்.

சாலையோரமாக திடீரென கார் பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பரபரப்பான திருப்பூர் சாலையில் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...