திருக்காட்டுப்பள்ளியில் ஒருவர் கொலை - குற்றவாளிகள் 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் யார் பெரிய ஆள் என்ற போட்டியில் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேரும் கோவை புறநகர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரூபா முன்பாக நேரில் ஆஜராகி உள்ளனர்.


கோவை: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள திருச்சென்னம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் வி.எஸ்.எல்.குமார் என்கிற முருகையன். இவர் மீது திருக்காட்டுப் பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் யார் பெரிய ஆள் என்ற போட்டியில் குமாருக்கும் அவரது முன்னாள் நண்பர் பவுசு செந்திலுக்கும் இடையே போட்டி நிலவி வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குமார் தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவரை 3 பைக்குகள், ஒரு காருடன் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழ விழுந்த குமாரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் தலை துண்டான நிலையில், குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரின் மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில், பவுசு செந்தில், சாமி ரவி, மோகன், பிரசாந்த்.



கடமுடா மணி, குட்டி என்கிற பிரவின் ஆகிய 6 பேர் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகள் 6 பேரையும் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இன்று அந்த ஆறு பேரும் கோவை புறநகர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரூபா முன்பாக நேரில் ஆஜராகி உள்ளனர்.



இந்நிலையில் 6 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...