வால்பாறை கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிப்பு - திருப்பலியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது


கோவை: நாடு முழுவதும் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.



கோவை மாவட்டம் வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.



வால்பாறை நகர் பகுதியில் உள்ள திரு இருதய ஆலயம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ள நூற்று கணக்காணவர்களின் கல்லறைகள் அனைத்தும் வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெலுகுவர்த்தி ஏந்தி பிரத்தனைகள் நடைபெற்றது, வால்பாறை திரு இருதய ஆலயம் பங்கு தந்தை அருட் திரு ஜெகன் ஆன்டனி தலைமையில் கல்லறை தோட்டத்தில் உள்ள பீடத்தில் மரித்தோர்களுக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.



இதை போல வால்பாறை புனித லூக்கா ஆலயம் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரதனைகள் நடத்தப்பட்டது.



மேலும் வால்பாறை சி எஸ் ஐ ஆலயத்திலும், முடிஸ் புனித அந்தோனியார் ஆலயத்திலும் ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயத்திலும், சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திரு நாள் அனுசரிக்கப்பட்டது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...