வால்பாறை கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிப்பு - திருப்பலியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது


கோவை: நாடு முழுவதும் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.



கோவை மாவட்டம் வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.



வால்பாறை நகர் பகுதியில் உள்ள திரு இருதய ஆலயம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ள நூற்று கணக்காணவர்களின் கல்லறைகள் அனைத்தும் வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெலுகுவர்த்தி ஏந்தி பிரத்தனைகள் நடைபெற்றது, வால்பாறை திரு இருதய ஆலயம் பங்கு தந்தை அருட் திரு ஜெகன் ஆன்டனி தலைமையில் கல்லறை தோட்டத்தில் உள்ள பீடத்தில் மரித்தோர்களுக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.



இதை போல வால்பாறை புனித லூக்கா ஆலயம் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரதனைகள் நடத்தப்பட்டது.



மேலும் வால்பாறை சி எஸ் ஐ ஆலயத்திலும், முடிஸ் புனித அந்தோனியார் ஆலயத்திலும் ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயத்திலும், சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திரு நாள் அனுசரிக்கப்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...