நீண்ட நாட்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சரவணம்பட்டி பகுதி குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்ற குற்றவாளி தெரிவித்துள்ளார். குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக அவர் கூறினார்.


கோவை: திருந்தி வாழ்ந்து வரும் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழகறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாக குற்றவாளி சண்முகம் தெரிவித்தார்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் விக்கு என்கிற சண்முகம். இவர் மீது பத்திற்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ளன. இவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் இவரது சகோதரர் சிவா என்கிற சிவனேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற சிவனேசர் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் சண்முகம் இன்று தனது வழக்கறிஞர்களுடன் வந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.



அப்போது பேட்டியளித்த அவர் போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் கூறினார். குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக தெரிவித்தார். 15 வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும் தெரிவித்தார். மேலும் சிறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது என கூறிய அவர், திருந்தி வாழ்ந்து வரும் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழகறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் தெரிவித்தார்.

தான் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு ஆஜராக தயாராக இருந்ததாகவும், ஆனால் எதிர் தரப்பினர் தன்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் கூறினார். இவ்வாறான சூழலில் காவல்துறையினர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் கடந்த வாரத்தில் தனது அண்ணனை பிடித்து காலை உடைத்து அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னையும் காவல்துறையினர் சுட்டு விடுவார்கள் என்பதால் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும், தன் குடும்பத்தினருக்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்றார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...