நீண்ட நாட்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சரவணம்பட்டி பகுதி குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்ற குற்றவாளி தெரிவித்துள்ளார். குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக அவர் கூறினார்.


கோவை: திருந்தி வாழ்ந்து வரும் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழகறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாக குற்றவாளி சண்முகம் தெரிவித்தார்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் விக்கு என்கிற சண்முகம். இவர் மீது பத்திற்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ளன. இவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் இவரது சகோதரர் சிவா என்கிற சிவனேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற சிவனேசர் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் சண்முகம் இன்று தனது வழக்கறிஞர்களுடன் வந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.



அப்போது பேட்டியளித்த அவர் போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் கூறினார். குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக தெரிவித்தார். 15 வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும் தெரிவித்தார். மேலும் சிறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது என கூறிய அவர், திருந்தி வாழ்ந்து வரும் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழகறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் தெரிவித்தார்.

தான் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு ஆஜராக தயாராக இருந்ததாகவும், ஆனால் எதிர் தரப்பினர் தன்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் கூறினார். இவ்வாறான சூழலில் காவல்துறையினர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் கடந்த வாரத்தில் தனது அண்ணனை பிடித்து காலை உடைத்து அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னையும் காவல்துறையினர் சுட்டு விடுவார்கள் என்பதால் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும், தன் குடும்பத்தினருக்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...