தாராபுரத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி வட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது, தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். வேளாண் உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், வேளாண் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்றைய தினம், தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...