ஊராட்சியில் ரூ.30 லட்சம் மோசடி - தொட்டம்பட்டி கிராம சபை கூட்டத்தில் பாமகவினர் வாக்குவாதம்

கடந்த 2019-20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளதாக கூறி, பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கடந்த 2019- 20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளது. இதை பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறிந்து இன்றைய கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாங்கள் தலைவராக இருக்கும் காலத்தில் தவறு நடைப்பெற வில்லை என தெரிவித்தனர். மேலும் தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இனிவரும் காலங்களில் மோசடிகள் நடைபெற்றால் பாமக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். குடிமங்கலம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார் பொதுக் குழு உறுப்பினர் சுவாமிநாதன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், கொள்கை பரப்பு செயலாளர் முருகவேல் கனகராஜ் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...