ஊராட்சியில் ரூ.30 லட்சம் மோசடி - தொட்டம்பட்டி கிராம சபை கூட்டத்தில் பாமகவினர் வாக்குவாதம்

கடந்த 2019-20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளதாக கூறி, பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கடந்த 2019- 20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளது. இதை பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறிந்து இன்றைய கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாங்கள் தலைவராக இருக்கும் காலத்தில் தவறு நடைப்பெற வில்லை என தெரிவித்தனர். மேலும் தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இனிவரும் காலங்களில் மோசடிகள் நடைபெற்றால் பாமக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். குடிமங்கலம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார் பொதுக் குழு உறுப்பினர் சுவாமிநாதன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், கொள்கை பரப்பு செயலாளர் முருகவேல் கனகராஜ் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...