ஊராட்சியில் ரூ.30 லட்சம் மோசடி - தொட்டம்பட்டி கிராம சபை கூட்டத்தில் பாமகவினர் வாக்குவாதம்

கடந்த 2019-20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளதாக கூறி, பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கடந்த 2019- 20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளது. இதை பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறிந்து இன்றைய கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாங்கள் தலைவராக இருக்கும் காலத்தில் தவறு நடைப்பெற வில்லை என தெரிவித்தனர். மேலும் தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இனிவரும் காலங்களில் மோசடிகள் நடைபெற்றால் பாமக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். குடிமங்கலம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார் பொதுக் குழு உறுப்பினர் சுவாமிநாதன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், கொள்கை பரப்பு செயலாளர் முருகவேல் கனகராஜ் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...