தேவம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவருக்கு எதிர்ப்பு - தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி

பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜ் வீடு கட்டுவதற்காக, மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தனியே குழாய் மூலம் முறைகேடாக தண்ணீர் எடுத்து வருவதாக தேவம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் தம்பதியினர் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: வீடு கட்டுவதற்கு முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தட்டிக்கேட்டதால், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கிராம சபை கூட்டத்தில் தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள துவாரகா அவன்யூ பகுதியை சேர்ந்த நூல் வியாபாரி தர்மசீலன் என்பவரது வீட்டிற்கு அருகில் பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜ் வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டிட வேலைக்காக பழங்கரை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தனியே குழாய் மூலம் முறைகேடாக தண்ணீரை எடுத்துவருவதாகவும், இதனால் ஒரு மணிநேரம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பதினைந்து நிமிடம் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் சார்பாக துணைத் தலைவரிடம் கேட்டுள்ளார்.

இதனால், கோபம் அடைந்த துணைத் தலைவர், தர்மசீலனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தர்மசீலன் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.



கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து, எனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் துணைத்தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள், எடுக்கவில்லை என்றால் தீ குளிக்கப் போகிறேன் என கூறி தன் மீது ஊற்றிக் கொண்டார்.



உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து அவரிடம் இருந்து பெட்ரோலை பிடுங்கி கீழே ஊற்றி மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.



இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் தர்மசீலன் தன் மனைவியுடன் அங்கிருந்து சென்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...