தேவம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவருக்கு எதிர்ப்பு - தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி

பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜ் வீடு கட்டுவதற்காக, மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தனியே குழாய் மூலம் முறைகேடாக தண்ணீர் எடுத்து வருவதாக தேவம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் தம்பதியினர் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: வீடு கட்டுவதற்கு முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தட்டிக்கேட்டதால், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கிராம சபை கூட்டத்தில் தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள துவாரகா அவன்யூ பகுதியை சேர்ந்த நூல் வியாபாரி தர்மசீலன் என்பவரது வீட்டிற்கு அருகில் பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜ் வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டிட வேலைக்காக பழங்கரை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தனியே குழாய் மூலம் முறைகேடாக தண்ணீரை எடுத்துவருவதாகவும், இதனால் ஒரு மணிநேரம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பதினைந்து நிமிடம் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் சார்பாக துணைத் தலைவரிடம் கேட்டுள்ளார்.

இதனால், கோபம் அடைந்த துணைத் தலைவர், தர்மசீலனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தர்மசீலன் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.



கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து, எனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் துணைத்தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள், எடுக்கவில்லை என்றால் தீ குளிக்கப் போகிறேன் என கூறி தன் மீது ஊற்றிக் கொண்டார்.



உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து அவரிடம் இருந்து பெட்ரோலை பிடுங்கி கீழே ஊற்றி மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.



இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் தர்மசீலன் தன் மனைவியுடன் அங்கிருந்து சென்றார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...