மலேசியாவில் உள்ள தனது மனைவியை மீட்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு

மலேசியாவில் உள்ள தனது மனைவியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் தனது குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: மலேசியாவில் சிக்கியுள்ள தனது மனைவியை மீட்க வலியுறுத்தி தனது குழந்தைகளுடன் கணவர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சரவணன் மாற்றுத்திறனாளி என்பதால் தனலட்சுமி பல்வேறு இடங்களில் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மலேசியாவில் வீட்டு வேலைக்கு அதிக சம்பளம் தருவதாக கூறியதை தொடர்ந்து ஏஜென்ட் ஒருவர் மூலம் ஒன்றரை லட்சம் செலவு செய்து மலேசியா சென்றுள்ளார். ஆனால் ஏஜென்ட் கூறியது போல வேலை வழங்காமல் அதிக வேலை வாங்கியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அதே வேளையில் சரவணன் தனலட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதால் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி வர வலியுறுத்தியுள்ளார். ஆனால் வீட்டு வேலை செய்யும் இடத்தில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே இந்தியா செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.



மாற்றுத்திறனாளியான தன்னால் தனது மகள் மற்றும் மகள் ஆகியோரை கவனிக்க முடியாதால் தனது மனைவியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரவணன் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...