பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியான வன்முறையும், தலித் விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்

கோவையில் பாரூக் என்ற திராவிட கழகத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது எனவும், பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்களும் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

கோவையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக விமான நிலையத்தில் சந்தித்தாக தெரிவித்தார். மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றியது போல நிறைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், பணபட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மக்கள் நல கூட்டணியானது கருத்து வேறுபாடுகளுடன் அதில் உள்ள கட்சிகள்  ஒன்றாக இருந்து வந்ததாகவும் தேர்தலில் போட்டியிடாத  சி.பி.ஐ , விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்க தக்கது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் பாரூக் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என கூறியவர் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் குற்றச்சாட்டினார். 5 மாநில தேர்தல் காங்கிரஸ் தோல்வி என்றோ, பா.ஜ.கவிற்கு வெற்றி என்றோ எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கோவாவி அதிக இடங்களை காங்கரஸ் வெற்றி பெற்றிருந்தும்  குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சியை பா.ஜ.க அமைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். அவினாசி அத்திகடவு திட்டத்திற்கு  தமிழக அரசு நிதி ஓதுக்கி இருப்பது வரவேற்க தக்கது எனவும் தெரிவித்த அவர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்க காரணமானவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...