கோவாவில் நடைபெறும் களரி பயட்டு போட்டி - உடுமலை வீரர்கள் எட்டு பேர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டுப் களரி பயட்டு போட்டியில் தமிழக அணி சார்பாக உடுமலை வீரர்கள் 8 பேர் கலந்து கொள்கின்றனர்.


திருப்பூர்: உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் களரி பயட்டு போட்டியில் பங்கேற்கும் உடுமலை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது.

தேசிய அளவிலான 37 வது களரிப்பயட்டு போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 தேதி கோவாவில் நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை சார்பில் வீ ஜீவா, கே.ருத்ரேந்தர், டி.விக்னேஸ்வரன், எம்.முத்துச்செல்வம், வி.தரன், எம்.விக்னேஷ், ஆர்.ராமசந்திரன், கே.விசாலி ஆகியோர் களரி பயட்டு போட்டியில் உடுமலை மடத்துக்குளம் பகுதியில் இருந்து கலந்து கொள்கின்றனர். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி பயட்டு ஸ்டேஷன் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார். லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர், எஸ்.ஆர்.எஸ்.செல்வராஜ் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர், மூர்த்தி பணி நிறைவு நூலகர், கணேசன் ஜிவிஜி காசாளர், சங்கர மகாதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 43 வகையான விளையாட்டுகள் அதில் அடங்கும். அதில் முதல் முறையாக களரிப்பயட்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம் மாதம் தொடங்குகிறது போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். களரிப் பயட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் 7 & 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இதில் 300 மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்களைகள் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். தமிழகம் சார்பாக 8 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். ஏழு வகையான பிரிவுகளில நடைபெறுகின்றது.

சுவடு, மெய்பயட்டு, உருமிவீசல், சவுட்டி பொங்கல், கைப்போர், கேட்டுக்கரி வாளும் பரிச்சா ஆகிய பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் மாநில செயலாளர் ஆசான் வீரமணி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...