கோவாவில் நடைபெறும் களரி பயட்டு போட்டி - உடுமலை வீரர்கள் எட்டு பேர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டுப் களரி பயட்டு போட்டியில் தமிழக அணி சார்பாக உடுமலை வீரர்கள் 8 பேர் கலந்து கொள்கின்றனர்.


திருப்பூர்: உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் களரி பயட்டு போட்டியில் பங்கேற்கும் உடுமலை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது.

தேசிய அளவிலான 37 வது களரிப்பயட்டு போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 தேதி கோவாவில் நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை சார்பில் வீ ஜீவா, கே.ருத்ரேந்தர், டி.விக்னேஸ்வரன், எம்.முத்துச்செல்வம், வி.தரன், எம்.விக்னேஷ், ஆர்.ராமசந்திரன், கே.விசாலி ஆகியோர் களரி பயட்டு போட்டியில் உடுமலை மடத்துக்குளம் பகுதியில் இருந்து கலந்து கொள்கின்றனர். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி பயட்டு ஸ்டேஷன் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார். லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர், எஸ்.ஆர்.எஸ்.செல்வராஜ் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர், மூர்த்தி பணி நிறைவு நூலகர், கணேசன் ஜிவிஜி காசாளர், சங்கர மகாதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 43 வகையான விளையாட்டுகள் அதில் அடங்கும். அதில் முதல் முறையாக களரிப்பயட்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம் மாதம் தொடங்குகிறது போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். களரிப் பயட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் 7 & 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இதில் 300 மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்களைகள் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். தமிழகம் சார்பாக 8 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். ஏழு வகையான பிரிவுகளில நடைபெறுகின்றது.

சுவடு, மெய்பயட்டு, உருமிவீசல், சவுட்டி பொங்கல், கைப்போர், கேட்டுக்கரி வாளும் பரிச்சா ஆகிய பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் மாநில செயலாளர் ஆசான் வீரமணி தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...