போயம்பாளையத்தில் 66வது பவளக்கொடி கும்மி ஆட்டம் அரங்கேற்றம் - 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தில் நடைபெற்ற 66 வது பவளக்கொடி கும்மி ஆட்ட அரங்கேற்றத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பாரம்பரிய கும்மி ஆட்டத்தை ஆடி அசத்தினர்.


திருப்பூர்: 3 மணி நேரம் நடைபெற்ற கும்மி ஆட்ட நிகழ்ச்சியில் 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி அடித்து மிக நேர்த்தியாக ஆடியதை திரளானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாரம்பரிய கும்மி ஆட்டம் பெரும் எழுச்சி பெற்று வருகிறது. கோவில் விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விழாக்களில் இடம்பெறும் கும்மி ஆட்டம் திருப்பூர் பகுதியில் பொதுமக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.



அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் பவளக்கொடி கும்மி குழுவின் 66 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.



இதில் கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் 300 பெண்கள் பல்வேறு கும்மி பாடல்களுக்கு கும்மி ஆட்டம் ஆடி அசத்தினார்கள்.



3 மணி நேரம் நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியில் 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி ஆடினார்கள். மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் திரண்டு ரசித்தனர். திருப்பூரில் கும்மி ஆட்டம் புத்துணர்வுடன் வளர்ந்து வருவதாகவும், பாரம்பரிய கும்மி ஆட்டத்தை பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று ஆடுவதாக கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்த கும்மி ஆட்டம் ஆடுவதன் மூலம் மனமும் உடலும் புத்துணர்வு பெறுவதாகவும் பெண்கள் ஏராளமாக கலந்து கொண்டு கும்மி ஆட ஆர்வம் காட்டுவதாக இளம் பெண்கள் பாரம்பரிய கும்மி ஆட்டத்தை மீட்டெடுத்து வருவதாகவும் ஷர்மி ஶ்ரீ என்ற பெண் தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...