கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது.


கோவை: கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, தோல்கருவிகள், மொழிதிறன், நாடகம், நடனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளில் 190 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 7470 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.



கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது.



இந்த போட்டியில் கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, தோல்கருவிகள், மொழிதிறன், நாடகம், நடனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளில் 190 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 7470 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.



இந்நிலையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த கலைத் திருவிழாவை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார், நேரில் பார்வையிட்டு இதில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு கலை நிகழ்ச்சி போட்டிகளை கண்டுகளித்தார். இதில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...