திமுக ஆட்சியில் தமிழகம் அழிவுபாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - எடப்பாடி பழனிசாமி புகார்

ஒட்டு மொத்த தமிழகமும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை மாற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவினை தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


திருப்பூர்: நெசவாளர்கள் துணிக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி விசைத்தறி தொழில் புரிபவரக்ள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கட்சியினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காங்கேயம் வந்திருந்தார்.



அப்போது காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே 52 அடி நீளம் உயரமுள்ள கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றி வைத்தார்.



பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், விடியா திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த பகுதி நெசவு வேளாண் தொழில் அதிகம் உள்ளது.

ஆனால் இந்த தொழில் செய்பவர்கள் விடியா திமுக அரசால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.கொப்பரை விலை அதிமுக ஆட்சியில் ஏற்றி கொடுக்கபட்டது. ஆனால் திமுக அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண் துறை சிறப்பாக இருந்தது. திமுக அரசு விவசாயிகளுக்கு 2 லட்சம் பம்ப் செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும் வராது என தெரியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். அந்தளவிற்கு மின் தடை உள்ளது.

அதேபோல் நெசவாளர்கள் துணிக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி விசைத்தறி தொழில் புரிபவரக்ள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் விவசாயிகள் மகிச்சியாக இருந்தனர். ஆனால் விவசாயம், நெசவு தொழில் திமுக ஆட்சியில் அழிந்து வருகிறது. ஒட்டு மொத்த தமிழகமும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்நிலை மாற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு உங்கள் ஆதரவினை தர வேண்டும். அதிமுக நிருத்தும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...