உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரி காலிக்குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர் : அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கோரி உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிபட்டி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரி காலிக்குடங்களுடன் கண்டனஆர்ப்பாட்டம். ஜல்லிபட்டி நால்ரோட்டில் நடைபெற்றது. உடுமலைஒன்றிய கமிட்டி உறுப்பினர் மாசானி தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி கமிட்டிஉறுப்பினர்கள் குமரகுரு, அஜித்குமார், மாதர்சங்கம் கமிட்டி கஸ்தூரி, வி.தொ.ச.செயலாளர் ரங்கராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீசன், முன்னாள் உடுமலைதாலூகா செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஜல்லிபட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். புதுக்காலனி, வெங்கடேசாகாலனியில் வசிக்கும் மக்ககளை காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் போக்கோடு செயல்படும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு 3 மாதகாலமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது அநியாயம். உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.



50 பெண்கள் உட்பட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...