உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரி காலிக்குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர் : அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கோரி உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிபட்டி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரி காலிக்குடங்களுடன் கண்டனஆர்ப்பாட்டம். ஜல்லிபட்டி நால்ரோட்டில் நடைபெற்றது. உடுமலைஒன்றிய கமிட்டி உறுப்பினர் மாசானி தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி கமிட்டிஉறுப்பினர்கள் குமரகுரு, அஜித்குமார், மாதர்சங்கம் கமிட்டி கஸ்தூரி, வி.தொ.ச.செயலாளர் ரங்கராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீசன், முன்னாள் உடுமலைதாலூகா செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஜல்லிபட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். புதுக்காலனி, வெங்கடேசாகாலனியில் வசிக்கும் மக்ககளை காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் போக்கோடு செயல்படும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு 3 மாதகாலமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது அநியாயம். உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.



50 பெண்கள் உட்பட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...