கோவை மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டம் - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டம் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


கோவை: வால்பாறையில். நடந்த மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மண்டல திமுக விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார்.நகர செயலாளர் சுதாகரன் வரவேற்றார். கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஒன்றிய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். கொப்பரை கொள்முதல் நிதியை மூன்று மடங்காக உயர்த்தி தர வேண்டும். பசுமை வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட வாரியத்தில் நடவடிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வை திரும்ப பெற கையெழுத்து இயக்கத்திற்கு விவசாய அணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS.விஜயன் சிறப்புரை யாற்றினார். இக்கூட்டத்தில் கோழிக்கடை கணேஷ், ஜே. பாஸ்கர், சுரேஷ்குமார் மற்றும் விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...