அவிநாசியில் நடைபெற்ற திருமணத்தில் சமையல் கலைஞர்களுக்குள் மோதல் - கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி

அவிநாசியில் திருமணத்துக்கு வந்த சமையல் மற்றும் உணவு பரிமாறும் வேலை செய்யும் ஆட்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருமணத்திற்கு வந்த சமையல் லைஞர்கள் மற்றும் உணவு பரிமாறும் வேலை ஆட்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் அடித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ குமரன் மஹால் அமைந்துள்ளது. இதில் இன்று திருமணம் நடைபெற்றது.

இதற்காக நேற்று ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் ஆனந்தன் என்பவர் மூலம் திருமணத்திற்கு சமையல் மற்றும் உணவு பரிமாறுவதற்காக 10 பெண்கள் உள்ளிட்ட 20 ஆண்கள் என அழைத்து வந்துள்ளார்.

இதில் நேற்று இரவு 12.00 மணிக்கு மேல் சமையல் கலைஞர்கள் தங்களுக்கு உண்டான உணவை சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அதில் ஆனந்தன் அழைத்து வந்த சமையல் கலைஞர்களில், கரூர் மாவட்டம் பொகலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் 44, நாமக்கல் மாவட்டம், சோமசுந்தரம் மகன் சுந்தரமூர்த்தி 50, மற்றும் பெயர், விலாசம் தெரியாத மற்றொரு நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில், பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் சேர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை தாக்கியுள்ளனர். பதிலுக்கு அந்நபரும் இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை இருவரும் சேர்ந்து அடித்து மண்டபத்தை விட்டு வெளியில் துரத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடும் மோதலில் அடையாளம் தெரியாத அந்த நபரை பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அடையாளம் தெரியாத அந்த நபர் மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். மயங்கி கிடந்த அந்த நபர் குறித்து, அப்பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்த நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100 க்கு அழைத்து தகவலை சொல்லி உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் ரத்தக்காயத்துடன் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



அங்கு பரிசோதித்ததில் அந்த நபர் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இச்சம்பவம் குறித்து பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரையும் கைது செய்த போலீசார் இறந்த நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...