அவிநாசியில் நடைபெற்ற திருமணத்தில் சமையல் கலைஞர்களுக்குள் மோதல் - கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி

அவிநாசியில் திருமணத்துக்கு வந்த சமையல் மற்றும் உணவு பரிமாறும் வேலை செய்யும் ஆட்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருமணத்திற்கு வந்த சமையல் லைஞர்கள் மற்றும் உணவு பரிமாறும் வேலை ஆட்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் அடித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ குமரன் மஹால் அமைந்துள்ளது. இதில் இன்று திருமணம் நடைபெற்றது.

இதற்காக நேற்று ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் ஆனந்தன் என்பவர் மூலம் திருமணத்திற்கு சமையல் மற்றும் உணவு பரிமாறுவதற்காக 10 பெண்கள் உள்ளிட்ட 20 ஆண்கள் என அழைத்து வந்துள்ளார்.

இதில் நேற்று இரவு 12.00 மணிக்கு மேல் சமையல் கலைஞர்கள் தங்களுக்கு உண்டான உணவை சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அதில் ஆனந்தன் அழைத்து வந்த சமையல் கலைஞர்களில், கரூர் மாவட்டம் பொகலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் 44, நாமக்கல் மாவட்டம், சோமசுந்தரம் மகன் சுந்தரமூர்த்தி 50, மற்றும் பெயர், விலாசம் தெரியாத மற்றொரு நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில், பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் சேர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை தாக்கியுள்ளனர். பதிலுக்கு அந்நபரும் இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை இருவரும் சேர்ந்து அடித்து மண்டபத்தை விட்டு வெளியில் துரத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடும் மோதலில் அடையாளம் தெரியாத அந்த நபரை பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அடையாளம் தெரியாத அந்த நபர் மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். மயங்கி கிடந்த அந்த நபர் குறித்து, அப்பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்த நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100 க்கு அழைத்து தகவலை சொல்லி உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் ரத்தக்காயத்துடன் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



அங்கு பரிசோதித்ததில் அந்த நபர் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இச்சம்பவம் குறித்து பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரையும் கைது செய்த போலீசார் இறந்த நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...