அவிநாசியில் நடைபெற்ற திருமணத்தில் சமையல் கலைஞர்களுக்குள் மோதல் - கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி

அவிநாசியில் திருமணத்துக்கு வந்த சமையல் மற்றும் உணவு பரிமாறும் வேலை செய்யும் ஆட்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருமணத்திற்கு வந்த சமையல் லைஞர்கள் மற்றும் உணவு பரிமாறும் வேலை ஆட்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் அடித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ குமரன் மஹால் அமைந்துள்ளது. இதில் இன்று திருமணம் நடைபெற்றது.

இதற்காக நேற்று ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் ஆனந்தன் என்பவர் மூலம் திருமணத்திற்கு சமையல் மற்றும் உணவு பரிமாறுவதற்காக 10 பெண்கள் உள்ளிட்ட 20 ஆண்கள் என அழைத்து வந்துள்ளார்.

இதில் நேற்று இரவு 12.00 மணிக்கு மேல் சமையல் கலைஞர்கள் தங்களுக்கு உண்டான உணவை சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அதில் ஆனந்தன் அழைத்து வந்த சமையல் கலைஞர்களில், கரூர் மாவட்டம் பொகலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் 44, நாமக்கல் மாவட்டம், சோமசுந்தரம் மகன் சுந்தரமூர்த்தி 50, மற்றும் பெயர், விலாசம் தெரியாத மற்றொரு நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில், பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் சேர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை தாக்கியுள்ளனர். பதிலுக்கு அந்நபரும் இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை இருவரும் சேர்ந்து அடித்து மண்டபத்தை விட்டு வெளியில் துரத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடும் மோதலில் அடையாளம் தெரியாத அந்த நபரை பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அடையாளம் தெரியாத அந்த நபர் மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். மயங்கி கிடந்த அந்த நபர் குறித்து, அப்பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்த நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100 க்கு அழைத்து தகவலை சொல்லி உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் ரத்தக்காயத்துடன் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



அங்கு பரிசோதித்ததில் அந்த நபர் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இச்சம்பவம் குறித்து பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரையும் கைது செய்த போலீசார் இறந்த நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...