அவிநாசியில் நடைபெற்ற திருமணத்தில் சமையல் கலைஞர்களுக்குள் மோதல் - கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி

அவிநாசியில் திருமணத்துக்கு வந்த சமையல் மற்றும் உணவு பரிமாறும் வேலை செய்யும் ஆட்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருமணத்திற்கு வந்த சமையல் லைஞர்கள் மற்றும் உணவு பரிமாறும் வேலை ஆட்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் அடித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ குமரன் மஹால் அமைந்துள்ளது. இதில் இன்று திருமணம் நடைபெற்றது.

இதற்காக நேற்று ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் ஆனந்தன் என்பவர் மூலம் திருமணத்திற்கு சமையல் மற்றும் உணவு பரிமாறுவதற்காக 10 பெண்கள் உள்ளிட்ட 20 ஆண்கள் என அழைத்து வந்துள்ளார்.

இதில் நேற்று இரவு 12.00 மணிக்கு மேல் சமையல் கலைஞர்கள் தங்களுக்கு உண்டான உணவை சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அதில் ஆனந்தன் அழைத்து வந்த சமையல் கலைஞர்களில், கரூர் மாவட்டம் பொகலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் 44, நாமக்கல் மாவட்டம், சோமசுந்தரம் மகன் சுந்தரமூர்த்தி 50, மற்றும் பெயர், விலாசம் தெரியாத மற்றொரு நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில், பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் சேர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை தாக்கியுள்ளனர். பதிலுக்கு அந்நபரும் இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை இருவரும் சேர்ந்து அடித்து மண்டபத்தை விட்டு வெளியில் துரத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடும் மோதலில் அடையாளம் தெரியாத அந்த நபரை பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அடையாளம் தெரியாத அந்த நபர் மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். மயங்கி கிடந்த அந்த நபர் குறித்து, அப்பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்த நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100 க்கு அழைத்து தகவலை சொல்லி உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் ரத்தக்காயத்துடன் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



அங்கு பரிசோதித்ததில் அந்த நபர் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இச்சம்பவம் குறித்து பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரையும் கைது செய்த போலீசார் இறந்த நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...