உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் நல்வாய்ப்பாக எந்தொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


திருப்பூர்: உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் சேதமடைந்த மற்றும் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரையும் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட குட்டைதிடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது. குறிப்புதவி நூலகமான இங்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நாள்தோறும் வந்து புத்தகங்களை வாசித்து குறிப்புகளை எடுத்து தேர்வுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மணிமண்டபத்தில் நிகழும் அமைதியான நிலையும் சுற்றுச்சூழலும் புத்தகங்களை வாசிக்கும் போட்டித் தேர்வுகளுக்கு உதவிகரமாக உள்ளதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் நாராயணவி மணிமண்டபத்தை பாதுகாக்கும் வகையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதை முறைப்படி சீரமைப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சுற்றுச்சுவரின் ஒரு சில பகுதியில் அஸ்திவாரம் சேதமடைந்து ஆட்டம் கண்டு வருகிறது. இதனால் சுவர் அடியோடு பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி சேதம் அடைந்த சுவற்றின் வழியாக மர்ம ஆசாமிகள் இரவு நேரத்தில் மணிமண்டப வளாகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர். அங்கு அமர்ந்து மது குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக போட்டி தேர்வர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. எனவே உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் சேதமடைந்த மற்றும் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரையும் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...