சௌடேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா - கத்தி போட்டு அம்மனை அழைத்த பக்தர்கள்

கோவை வெள்ளக்கிணர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் நவராத்திரி கொலு விழாவில் பக்தர்கள் மார்பு மற்றும் கைகளில் இரத்தம் சொட்ட கத்தி போட்டு பரவசத்துடன் அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


கோவை: சிம்ம வாகனத்தில் திருவீதி உழா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர்.

கோவை வெள்ளக்கிணரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜை, அலங்கார பூஜை நடைபெற்று பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.



தொடர்ந்து தச்சந்தோட்டம் பகுதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



முன்னதாக அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் ஏற்றி அதன் முன்பு பக்தர்கள் கத்தி போடும் நிகழ்வு நடைபெற்றது.

அம்மன் சப்பரம் ஊர்வலம் ஆக புறப்பட்டு கோயில் வரும் முன்பு ஆலங்கொம்பு அழகு வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவசமான நிகழ்ச்சியில் இளைஞர்கள் கைகளில் கூர்மையான கத்தியைக் கொண்டு மார்பு மற்றும் இரண்டு கைகளில் வெட்டி இரத்தம் சொட்டச் சொட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.



சிம்ம வாகனத்தில் திருவீதி உழா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

தொடர்ந்து கலர் தோட்டத்தில் இருந்து சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீ வெள்ளை தாமரை வீர குமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் தீபாராதனை அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...