சௌடேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா - கத்தி போட்டு அம்மனை அழைத்த பக்தர்கள்

கோவை வெள்ளக்கிணர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் நவராத்திரி கொலு விழாவில் பக்தர்கள் மார்பு மற்றும் கைகளில் இரத்தம் சொட்ட கத்தி போட்டு பரவசத்துடன் அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


கோவை: சிம்ம வாகனத்தில் திருவீதி உழா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர்.

கோவை வெள்ளக்கிணரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜை, அலங்கார பூஜை நடைபெற்று பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.



தொடர்ந்து தச்சந்தோட்டம் பகுதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



முன்னதாக அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் ஏற்றி அதன் முன்பு பக்தர்கள் கத்தி போடும் நிகழ்வு நடைபெற்றது.

அம்மன் சப்பரம் ஊர்வலம் ஆக புறப்பட்டு கோயில் வரும் முன்பு ஆலங்கொம்பு அழகு வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவசமான நிகழ்ச்சியில் இளைஞர்கள் கைகளில் கூர்மையான கத்தியைக் கொண்டு மார்பு மற்றும் இரண்டு கைகளில் வெட்டி இரத்தம் சொட்டச் சொட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.



சிம்ம வாகனத்தில் திருவீதி உழா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

தொடர்ந்து கலர் தோட்டத்தில் இருந்து சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீ வெள்ளை தாமரை வீர குமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் தீபாராதனை அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...