உடுமலையில் சர்வதேச நிலவு நோக்கும் இரவு - மாணவர்கள் ஆர்வம்

சர்வதேச நிலவு நோக்கும் இரவு நாளையொட்டி திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியான உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது. அதில் மாணவ மாணவிகளுக்கு வானவியில் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் சர்வதேச நிலவு நோக்கும் இரவு நாளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ம் தேதி சர்வதேச நிலவு நோக்கும் இரவாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் கணேஸ்வரி தலைமை தாங்கினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், வானவியல் பற்றியும், வானவியல் சார்ந்த படிப்புகளைப் பற்றியும், வானவியலில் ஆர்வம் உள்ளவர்கள் எவ்வாறு தங்களது மேல்படிப்பினை தேர்வு செய்தால் வருங்காலங்களில் இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக வர முடியும் என்பது பற்றி மாதிரி பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.



தொடர்ந்து நிலவைப் பற்றிய 30க்கும் மேற்பட்ட சுவாரஸ்ய தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது, சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று ஆகியவற்றினுடைய நோக்கம், சந்திராயன்-3 வெற்றி உலக நாடுகளின் வரவேற்பை பெற்றுள்ளது பற்றியும், மங்கள்யான் செயற்கைக்கோள் எவ்வாறு அனுப்பப்பட்டது என்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்தார். குறிப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிவித்தார்.

தொடர்ந்து உடுமலை கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள், ஆசிரியர் சதீஷ்குமார், கல்லூரி மாணவிகள் ஹரிணி, மதுஸ்ரீ ஆகியோர் தொலைநோக்கிகள் வழியே சனிக்கோளினை வளையங்களுடனும், வியாழன் கோளையும், குறிப்பாக நிலவினை அதனுடைய மேடு பள்ளங்களுடன் தெளிவாக மாணவர்களுக்கு காண்பித்தனர்.

மாணவர்களின் பெற்றோர்களும் முதல்முறையாக தொலைநோக்கி வழியே நிலவை கண்டு ரசித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டி சார்பாக திருப்பூர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தொலைநோக்கி பயன்படுத்தி கோள்களையும் நிலவினையும் மாணவர்களுக்கு காண்பித்தார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...