உடுமலையில் சர்வதேச நிலவு நோக்கும் இரவு - மாணவர்கள் ஆர்வம்

சர்வதேச நிலவு நோக்கும் இரவு நாளையொட்டி திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியான உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது. அதில் மாணவ மாணவிகளுக்கு வானவியில் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் சர்வதேச நிலவு நோக்கும் இரவு நாளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ம் தேதி சர்வதேச நிலவு நோக்கும் இரவாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் கணேஸ்வரி தலைமை தாங்கினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், வானவியல் பற்றியும், வானவியல் சார்ந்த படிப்புகளைப் பற்றியும், வானவியலில் ஆர்வம் உள்ளவர்கள் எவ்வாறு தங்களது மேல்படிப்பினை தேர்வு செய்தால் வருங்காலங்களில் இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக வர முடியும் என்பது பற்றி மாதிரி பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.



தொடர்ந்து நிலவைப் பற்றிய 30க்கும் மேற்பட்ட சுவாரஸ்ய தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது, சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று ஆகியவற்றினுடைய நோக்கம், சந்திராயன்-3 வெற்றி உலக நாடுகளின் வரவேற்பை பெற்றுள்ளது பற்றியும், மங்கள்யான் செயற்கைக்கோள் எவ்வாறு அனுப்பப்பட்டது என்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்தார். குறிப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிவித்தார்.

தொடர்ந்து உடுமலை கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள், ஆசிரியர் சதீஷ்குமார், கல்லூரி மாணவிகள் ஹரிணி, மதுஸ்ரீ ஆகியோர் தொலைநோக்கிகள் வழியே சனிக்கோளினை வளையங்களுடனும், வியாழன் கோளையும், குறிப்பாக நிலவினை அதனுடைய மேடு பள்ளங்களுடன் தெளிவாக மாணவர்களுக்கு காண்பித்தனர்.

மாணவர்களின் பெற்றோர்களும் முதல்முறையாக தொலைநோக்கி வழியே நிலவை கண்டு ரசித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டி சார்பாக திருப்பூர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தொலைநோக்கி பயன்படுத்தி கோள்களையும் நிலவினையும் மாணவர்களுக்கு காண்பித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...