ஆயுத பூஜை கொண்டாட்டம் - கோவையில் பழங்கள் விலை இருமடங்கு அதிகரிப்பு

ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி இன்று கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று மந்தமாக இருந்தாலும் பழங்கள் விலை கடந்தாண்டை ஒப்பிடுவையில் இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளது.


கோவை: கோவை பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வண்ண வண்ண பூக்கள் குவிந்துள்ளன.

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து பூஜித்து வழிபடுவர். பண்டிகை தினம் நெருங்கியுள்ள சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

சேலம், நாமக்கல், தர்மபுரி, ராயக்கோட்டை, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தாண்டு செவ்வந்திப் பூ நல்ல விளைச்சல் உள்ளதால் செவ்வந்தி சராசரியாக ரூ.200 என்ற விலைக்கு விற்பனையாகின்றன. தற்போதைய சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் செவ்வந்தி பூ தற்போது ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.



கோழிக்கொண்டை ரூ.60 முதல் ரூ.100க்கும், செண்டு மல்லி ரூ.60 முதல் ரூ.70க்கும், சம்பங்கி ரூ.200க்கும் விற்பனையாகிறது. அரளி ரூ.300 முதல் ரூ.400க்கும், மல்லி ரூ.800- 1000 வரையும் விற்பனையாகின்றன.



பழங்களை பொறுத்த வரையில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180 ஆரஞ்சு ரூ.70 முதல் ரூ.80, மாதுளை ரூ.200 முதல் ரூ.240, திராட்சை ரூ.120 முதல் ரூ.140, சாத்துக்குடி ரூ.70 முதல் ரூ.80, கரும்பு ஜோடி ரூ.100க்கும், வாழை மரம் ஜோடி ரூ.40க்கும், வெள்ளை பூசனி கிலோ ரூ.30க்கும் வியாபாரம் செய்யப்படுகின்றன.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...