ஆயுத பூஜை கொண்டாட்டம் - கோவையில் பழங்கள் விலை இருமடங்கு அதிகரிப்பு

ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி இன்று கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று மந்தமாக இருந்தாலும் பழங்கள் விலை கடந்தாண்டை ஒப்பிடுவையில் இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளது.


கோவை: கோவை பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வண்ண வண்ண பூக்கள் குவிந்துள்ளன.

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து பூஜித்து வழிபடுவர். பண்டிகை தினம் நெருங்கியுள்ள சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

சேலம், நாமக்கல், தர்மபுரி, ராயக்கோட்டை, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தாண்டு செவ்வந்திப் பூ நல்ல விளைச்சல் உள்ளதால் செவ்வந்தி சராசரியாக ரூ.200 என்ற விலைக்கு விற்பனையாகின்றன. தற்போதைய சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் செவ்வந்தி பூ தற்போது ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.



கோழிக்கொண்டை ரூ.60 முதல் ரூ.100க்கும், செண்டு மல்லி ரூ.60 முதல் ரூ.70க்கும், சம்பங்கி ரூ.200க்கும் விற்பனையாகிறது. அரளி ரூ.300 முதல் ரூ.400க்கும், மல்லி ரூ.800- 1000 வரையும் விற்பனையாகின்றன.



பழங்களை பொறுத்த வரையில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180 ஆரஞ்சு ரூ.70 முதல் ரூ.80, மாதுளை ரூ.200 முதல் ரூ.240, திராட்சை ரூ.120 முதல் ரூ.140, சாத்துக்குடி ரூ.70 முதல் ரூ.80, கரும்பு ஜோடி ரூ.100க்கும், வாழை மரம் ஜோடி ரூ.40க்கும், வெள்ளை பூசனி கிலோ ரூ.30க்கும் வியாபாரம் செய்யப்படுகின்றன.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...