வால்பாறை பகுதியில் 20 இடங்களில் குளிக்க தடை - கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: வால்பாறை பகுதியில் 20 நீர் பிடிப்பு பகுதிகளுக்குள் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவு.

வால்பாறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளிப்பதால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுகிறது கடந்த 20 ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி படித்து வந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் நேற்று காடம்பாறை செல்லும் வழியில் அப்பர் ஆழியார் அணையில் குளித்த கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரதீப்பால்சாமி உயிரிழந்தார், இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் காந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி பலியாவதை தடுப்பதற்கு கீழ்க்கண்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, சிறு குன்றா கூலாங்கள் ஆறு, சோலையார் ஆர்ச், ஸ்டேன்மோர் ஆறு, கெஜமுடி கூடுதுறை,சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தலநார் நீர் வீழ்ச்சி, காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை, காடம்பாறை 501 டனால், சோலையார் டேம், சின்னக்கல்லார், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர் பால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு, அனலின் நீர்வீழ்ச்சி, மானாம்பள்ளி தங்கவேல் ஆறு உள்ளிட்ட 20 இடங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...