வால்பாறை பகுதியில் 20 இடங்களில் குளிக்க தடை - கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: வால்பாறை பகுதியில் 20 நீர் பிடிப்பு பகுதிகளுக்குள் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவு.

வால்பாறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளிப்பதால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுகிறது கடந்த 20 ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி படித்து வந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் நேற்று காடம்பாறை செல்லும் வழியில் அப்பர் ஆழியார் அணையில் குளித்த கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரதீப்பால்சாமி உயிரிழந்தார், இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் காந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி பலியாவதை தடுப்பதற்கு கீழ்க்கண்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, சிறு குன்றா கூலாங்கள் ஆறு, சோலையார் ஆர்ச், ஸ்டேன்மோர் ஆறு, கெஜமுடி கூடுதுறை,சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தலநார் நீர் வீழ்ச்சி, காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை, காடம்பாறை 501 டனால், சோலையார் டேம், சின்னக்கல்லார், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர் பால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு, அனலின் நீர்வீழ்ச்சி, மானாம்பள்ளி தங்கவேல் ஆறு உள்ளிட்ட 20 இடங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...