சமூக விரோதி கூடாரமாக மாறிய உக்கடம் பேருந்து நிலையம்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

உக்கடம் பேருந்து நிலையத்தில் அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: சமூக விரோதிகளின் கூடரமாக உக்கடம் பேருந்து நிலையம் மாறியுள்ளதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரத்தில் சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணிக்க தினந்தோறும் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் உக்கடம் பேருந்து நிலைய பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடைய பேருந்து நிலையம் முழுவதும் மாநகராட்சி பராமரிப்பு இல்லாமல் தூசி காடாகவும், குப்பை மேடாகவும் காணப்படுகிறது.



அதே போல அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளனர். இங்கு தினந்தோறும் இரவில் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வரும் மக்கள் முகம் சுழிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...