கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் - தமிழிசை வேதனை

இளைஞர்களுக்கு படிக்கும் போதே அரசியல் தேவை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கோவையில் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆண்களை விட அதிக அரசியலை செய்த காரணத்தினால் இன்று ஆளுநராக உயர்ந்திருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு.

கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கல்லூரி மாணவர்களிடையே அரை மணி நேரம் அரசியலைப் பற்றி உரையாற்றினார்.



அப்போது பேசிய அவர், கடுமையான பணி சூழ்நிலையிலும் ஏன் இங்கு வந்தேன் என்றால் பாலிடிக்ஸ் என்பது எனக்கு பிடிக்கும், இந்த இடத்தில் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் தலைப்பே அரசியலை பற்றிதான். பொலிடிக்கல் அறிவியல் என்பது நாட்டிற்கு உபயோகமான ஒரு ஒரு சப்ஜெக்ட். அரசியல் இல்லாத இடமே கிடையாது.

இளைஞர்களுக்கு படிக்கும்போது அரசியல் தேவை என்பதுதான் எனது அழுத்தமான கருத்து. இது யாரு என்ன சொன்னாலும் மறுக்க முடியாது நேர்மறையான அரசியல் தேவை. தற்போது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எதிர்மறையான கருத்துக்களை சொல்ல வேண்டியதென்றால் மாணவர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் போராட்டம் நடத்தி மாணவர்களை பகடிக்காயாக பயன்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். ஆனால் அவர்கள் தலைவராக வருவதை நான் வரவேற்கிறேன்.

பிரதமர் உலகத்தில் எங்கே போனாலும் தமிழ் மொழியை சொல்லிவிட்டு தான் அவர் பெருமையை பேசுகிறார் அவர் தமிழுக்கு பங்கம் விளைப்பாரா? இந்தியாவில் திருக்குறளை பிரதமர் மேற்கோள் காட்டியுள்ளார். தமிழ் மொழியை அவர் கையாண்டதற்கு நாம் யாரும் அவரை பாராட்டவில்லை. பெரும்புள்ளிகளாக மாணவர்களும் வரவேண்டும். கட்டு கட்டாக வைத்திருப்பவர்களுக்கு தான் அரசியல் என்பதும், மற்றவர்களுக்கு அரசியல் இல்லை என்ற ஒரு எண்ணம் வந்து கொண்டிருக்கிறது.

அதே போல கத்தி கத்தி பேசுபவர்களுக்கு அரசியல் இல்லை, கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் என்ற சூழ்நிலை வந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாமல் சிறப்பான ஒரு சூழ்நிலையை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும் என்பது அல்ல, அரசியல் சார்ந்த கருத்துக்களை எழுதலாம், தூய்மையான அரசியல்வாதிகளுக்கு உதவலாம்.

பெண்களுக்கு 33 சதவீதம், சட்டமன்றத்தையும் பாராளுமன்றத்தையும் அலங்கரிப்பவர்கள் இவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் அதனால் தான் பெண்களுக்கு அரசியல் வேண்டும். ஆண்களை விட அதிகமாக அரசியல் செய்ததால் ஆளுநராக நிற்கிறேன். அரசியல் வாரிசாக இருந்தால் உங்களை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும், நீங்களே நேரடியாக கட்சி அல்லது ஒரு சமுதாய அமைப்புக்கு வந்தால் பல சவால்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த துணிச்சலையை மட்டும் விட்டு விடக்கூடாது என தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...