ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு

ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.


கோவை: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்குமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாதாரண மக்கள் நிறைந்து வாழும் ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் பலமுறை கிராம சபை கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்தோம். தற்போது சமுதாய நலக்கூடம் அமைத்திட ஏற்பாடு நடைபெறுவதாக தெரிய வருகிறது.

எனவே ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுத்து பேசப்பட்டது.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் கமிட்டி உறுப்பினர் சி.மாசாணி, அஜித் மற்றும் கருப்புசாமி, ரவிச்சந்திரன், சுரேஷ்குமார் மற்றும் மாதர் சங்கம் சார்பாக ஜல்லிப்பட்டி கிளை கிளைத்தலைவர் தெய்வானை, கமிட்டி உறுப்பினர் கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...