ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு

ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.


கோவை: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்குமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாதாரண மக்கள் நிறைந்து வாழும் ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் பலமுறை கிராம சபை கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்தோம். தற்போது சமுதாய நலக்கூடம் அமைத்திட ஏற்பாடு நடைபெறுவதாக தெரிய வருகிறது.

எனவே ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுத்து பேசப்பட்டது.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் கமிட்டி உறுப்பினர் சி.மாசாணி, அஜித் மற்றும் கருப்புசாமி, ரவிச்சந்திரன், சுரேஷ்குமார் மற்றும் மாதர் சங்கம் சார்பாக ஜல்லிப்பட்டி கிளை கிளைத்தலைவர் தெய்வானை, கமிட்டி உறுப்பினர் கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...