சிறுமிக்குப் பாலியல் தொல்லை - கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருப்பூர்: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி.

திருப்பூா் மாவட்டம், குண்டடம், பொட்டிக்காம்பாளையத்தைச் சோந்தவா் சுப்பிரமணி. கட்டட மேஸ்திரியான இவரிடம் சித்தாள் வேலைக்கு 35 வயது பெண் ஒருவா் வேலை செய்து வந்தாா். இவா் உடல்நலக்குறைவாக இருந்ததால், அவரது 15 வயது மகளை சுப்பிரமணி சித்தாள் வேலைக்கு கடந்த 2019 செப்டம்பா் 1 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் வேலைக்கு அழைத்துச்செல்லாமல் சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி வெளியூா் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் மகளிா் காவல் துறையினா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2000 ஆயிரம் அபராமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...