உடுமலை கால்நடை மருத்துவ பல்கலை.யில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம்

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "ஒருங்கிணைந்த கோழி சுகாதாரம் மூலம் நீடித்த நிலையான கோழி உற்பத்தி" என்ற தலைப்பில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை பேட்டை அருகே உள்ள கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் UKRI – GCRF நிதியுதவிடன் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோழி சுகாதார மைய திட்டதின் மூலம் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "ஒருங்கிணைந்த கோழி சுகாதாரம் மூலம் நீடித்த நிலையான கோழி உற்பத்தி" என்ற தலைப்பில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம் நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியை உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மற்றும் இத்திட்ட முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர் பா.குமாரவேல் தலைமை வகித்து நடத்தி திட்ட செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் பற்றி விவரித்தார்.

லண்டனின் ராயல் கால்நடை கல்லூரியின் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குநர் முனைவர் பியானோ டாம்லி இணையதளம் மூலம் திட்ட விளக்கவுரையை வழங்கினார். உடுமலைப்பேட்டை சுகுணா கோழியின மேலாண்மை நிறுவனத்தின் முதல்வர் முனைவர் கு.மணி கோழி உற்பத்தியில் உயிர் பாதுகாப்பு என்ற குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பொள்ளாச்சி சக்தி சுகர்ஸ் சோயா பிரிவின் முதுநிலை பொது மேலாளர் இரா.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கால்நடை நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பொ.சாமுவேல் மாசிலாமணி ரொனால்டு கருத்தரங்கு அறிமுகவுரை ஆற்றினார்.

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை ஒட்டுண்ணியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் முனைவர் க. செந்தில்வேல் வரவேற்புரையாற்றினார். தேனி விவசாயிகள் பயிற்சி மையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் முனைவர் ந. விமல் ராஜ்குமார் நன்றியுரையாற்றினார்.

இந்த பயிலரங்கில் கோழிப் பண்ணை பங்குதாரர்களான கோழி பண்ணையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்முனைவோர். கோழிப் பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகள், மற்றும் வல்லுநர்கள் பங்கேற்றனர். கோழி உற்பத்தியில் தீவனத்தின் முக்கியத்துவம், நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாவதை தடுக்கும் ஒருங்கிணைந்த சுகாதார முறை, உணவு மூலம் பரவும் நோய்க்கிருமிகள், மதிப்பு கூட்டல் மற்றும் ஆராய்ச்சி வழிகள் உள்ளிட்ட தலைப்புகளில் விரிவுரைகள் பல்வேறு நிறுவன நிபுணர்களால்

வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோழிப் பண்ணை பங்குதாரர்களுக்கு இடையே கோழிப்பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. கோழிப் பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி வளாகத்தில் கோழிப்பண்ணை உபகரணங்கள், கோழித் தீவன சேர்வைகள், கோழிகளுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது இதனை 121கோழிப்பண்ணையாளர்கள், 34 பங்குதாரர்கள், 53 மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பார்வையிட்டதுடன் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியான பண்ணையாளர்கள் வல்லுநர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...