கோவில் சுற்றுச்சவரை இடிக்க முயற்சி - நடவடிக்கை எடுக்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் நரசிம்மன்நாயக்கன் பாளையத்தில் உள்ள கோயில் சுற்றுச்சுவரை இடிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


 கோவை: கோவை அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சுற்றுச்சுவரை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரில் விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் 1999க்கும் பிறகு இட மனைகளாக பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலை அந்த ஊர் மக்களே சேர்ந்து நடத்தி வரும் நிலையில் அக்கோவிலில் செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்த சிலர் பொது மக்களிடம் வசூலித்த பணத்தை முறையாக காண்பிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



இதனால் அவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தற்பொழுது அந்த நபர்கள் கோவிலின் சுற்றுசுவரை இடிக்க முயல்வதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருத்தங்கள் ஏற்படுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...