கோவில் சுற்றுச்சவரை இடிக்க முயற்சி - நடவடிக்கை எடுக்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் நரசிம்மன்நாயக்கன் பாளையத்தில் உள்ள கோயில் சுற்றுச்சுவரை இடிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


 கோவை: கோவை அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சுற்றுச்சுவரை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரில் விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் 1999க்கும் பிறகு இட மனைகளாக பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலை அந்த ஊர் மக்களே சேர்ந்து நடத்தி வரும் நிலையில் அக்கோவிலில் செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்த சிலர் பொது மக்களிடம் வசூலித்த பணத்தை முறையாக காண்பிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



இதனால் அவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தற்பொழுது அந்த நபர்கள் கோவிலின் சுற்றுசுவரை இடிக்க முயல்வதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருத்தங்கள் ஏற்படுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...