உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சொற்பொழிவு போட்டி நடைபெற்றது

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி நடைபெற்றது. பள்ளி தமிழ் இலக்கிய மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சட்டமன்ற நாயகர் கலைஞரின் சட்டமன்ற சாதனைகள் குறித்த பள்ளி அளவிலான சொற்பொழிவுப் போட்டியினை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஏ.ஜெயராஜ் தொடங்கி வைத்தார்.

போட்டியின் நடுவர்களாக தமிழ் இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர். ராஜேந்திரன், முதுகலை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர்.

சொற்பொழிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவிகள் ச. தேன்மொழி முதலிடமும், சா கவியரசி 2-ம் இடமும் அ.கார்த்திகா 3-ம் இடமும் பெற்றனர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி மாணவியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...