உடுமலை அமராவதி நகரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு

அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் பகுதியில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் , இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி.வ ஜெயராமன், ராயல் அரிமா சங்க நிர்வாகிகள், ஶ்ரீ சக்ரா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும...