ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கேட்டுக்கொண்டனர். தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாததால் ஏமாற்றம் தெரிவித்தனர்.


Erode: தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கந்தவேல், கருணாநிதி, ஜெகநாதன் ஆகியோர் ஈரோட்டில் தமிழக முதல்வர் Stalin அவர்களை நேரில் சந்தித்து பேசி, மனு அளித்தனர்.




தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கந்தவேல் கூறியதாவது: "ஈரோட்டுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் Stalin அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். தொடர்ந்து அவரிடம் மனு அளித்தோம். அதில், DMK தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் நெசவாளர் நலனுக்காக 16 கோரிக்கைகள் மற்றும் சிறு, குறு தொழில் தொடர்பான திட்டங்களும், ஜவுளித்துறையில் அதிகம் உள்ள சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதற்கு முதல்வரிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்."




"கடந்த ஐந்து ஆண்டுகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சாதா விசைத்தறிகளை நாடா இல்ல விசைத்தறிகளாக நவீனப்படுத்த முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.




"DMK தேர்தல் அறிக்கையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த இலவச மின்சார அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பை தேர்தல் வாக்குறுதியாக வெளியீடு செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேட்டுக் கொள்கிறோம்," என மனுவில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...