ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கேட்டுக்கொண்டனர். தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாததால் ஏமாற்றம் தெரிவித்தனர்.


Erode: தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கந்தவேல், கருணாநிதி, ஜெகநாதன் ஆகியோர் ஈரோட்டில் தமிழக முதல்வர் Stalin அவர்களை நேரில் சந்தித்து பேசி, மனு அளித்தனர்.




தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கந்தவேல் கூறியதாவது: "ஈரோட்டுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் Stalin அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். தொடர்ந்து அவரிடம் மனு அளித்தோம். அதில், DMK தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் நெசவாளர் நலனுக்காக 16 கோரிக்கைகள் மற்றும் சிறு, குறு தொழில் தொடர்பான திட்டங்களும், ஜவுளித்துறையில் அதிகம் உள்ள சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதற்கு முதல்வரிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்."




"கடந்த ஐந்து ஆண்டுகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சாதா விசைத்தறிகளை நாடா இல்ல விசைத்தறிகளாக நவீனப்படுத்த முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.




"DMK தேர்தல் அறிக்கையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த இலவச மின்சார அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பை தேர்தல் வாக்குறுதியாக வெளியீடு செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேட்டுக் கொள்கிறோம்," என மனுவில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...