உடுமலை அமராவதி நகரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு

அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் பகுதியில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் , இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி.வ ஜெயராமன், ராயல் அரிமா சங்க நிர்வாகிகள், ஶ்ரீ சக்ரா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...